என் சோகங்களின் சுமைதாங்கி

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

நாடோடி கதைகள்

ஒருத்தன் சொன்னானாம் நீ கடலையை கொண்டுவா நான் உமியை கொண்டுவறேன் ரெண்டுபேரும் ஊதி ஊதி திம்போம்னு

அதுக்கு இன்னொருத்தன் சொன்னானாம் நீ சீடையை கொண்டுவா நான் கல்லை கொண்டுவறேன், நீ தட்டு நான் திங்கறேன்னு

வெள்ளி, 29 ஜூலை, 2011

நாடோடிக்கதைகள் ,

நாம் இழந்த மிக பெரிய செல்வம் என்றால் அது நாடோடி அல்லது நாட்டுப்புற கதைகள் என்றுதான் நான் சொல்வேன், நீதி நெறிகளையும், நல்வழிகளையும் காட்டும் கதைகள் என்றால் அவை மிகை இல்லை, நாட்டுப்புற கதைகளில் மகிழ்ச்சி, சோகம், அறியாமை, அறிவுடைமை, இலைமறை காயாய் காமம் என்று எல்லாம் உண்டு, ஒரு சிலரே அவற்றை தொகுத்து உள்ளார்கள், அதுவும் கடலில் ஒரு துளியை எடுத்தது போல் தான்,

அப்படி நான் படித்த கதைகள் சிலவற்றை இனி நான் அனுப்புகிறேன் படித்து பாருங்கள்,

ஒரு ஊரில் ஒரு கிழவி இருந்தாள், அவ ரொம்ப பெரிய கருமியாக இருந்தாள், வேலை செஞ்சு சம்பாதிக்கற காசையெல்லாம் வீட்டிலேயே சேர்த்துவச்சு செலவு செய்யாமல் இருப்பாள், இதை தெரிஞ்சுக்கிட்ட சில திருடன்கள் அவளோட வீட்டில் கன்னக்கோல் வைக்கறதுன்னு முடிவுசெஞ்சு அவளையும் அவ வீட்டையும் நோட்டம் விட்டுக்கிட்டு இருந்தானுக, அப்போ ஒரு நாள் கிழவி ராத்திரி கம்பு ஓடிக்கறதுக்கு கிளம்பினா, அதை தெரிஞ்சுக்கிட்ட திருடனுக அன்னைக்கு ராத்திரி அவ வீட்டுல கன்னக்கோல் வச்சு திருடரதுன்னு முடிவு செஞ்சாங்க

கிழவி வேலைக்கு கிளம்பற நேரத்தில் அவ வீட்டுல பெருச்சாளி அட்டகாசம் அதிகம் இருந்ததுனால சோள மாவுல இனிப்பையும் கூடவே விசத்தையும் கலந்து உருண்டை பிடிச்சு வச்சுட்டு கிளபினா, அவ அங்கிட்டு போனதும் திருடனுக இங்கிட்டு நுழைஞ்சு இருக்கறதை எல்லாம் கோணியில் சுத்திக்கிட்டு கிளம்பற நேரத்தில் சோள உருண்டையை பார்த்துட்டு அதை திங்கலாம்னு முடிவு பண்ணி அதை தின்னானுக, உடனே விஷம் தலைக்கேறி செத்துப்போனானுக,

வேலைக்கு போயிட்டு அர்த்தராத்திரி கிழவி வீட்டுக்கு வந்து பார்த்தா வீட்டுல கன்னம் வச்ச அடையாளம் இருக்குது வீட்டுக்குள்ள போய் பார்த்தா 4 திருடனுக செதுக்கிடக்கரானுக, கிழவிக்கு கையும் ஓடல, காலும் ஓடல, அவளுக்கோ பயம் புடிசுக்கிடுச்சு, இவனுக செத்த சேதி வெளிய தெரிஞ்சா அரசாங்கத்தில இருந்து வந்து கைது செஞ்சுடுவாங்க என்ன பண்றதுன்னு ஒரே ரோசனை கிழவிக்கு,

அப்போ அந்த ஊரு மடத்துல ஒரு சோம்பேறி சாமியார் இருந்தான், கிழவி அவனை போய் பார்த்து அடேய் சாமி எங்க ஊட்டுல இழவு விழுந்துருச்சு தூக்கிபோடுறதுக்கு ஊருக்காரனுக வர மாட்டாங்க நீ வந்து தூக்கிப்போடு 50 ரூபா வாங்கிக்கன்னு சொன்னா, அதுக்கு அந்த சாமியாரும் ஒத்துக்கிட்டு கிழவி ஊட்டுக்கு வந்தான்,

கிழவி உள்ள இருந்த ஒரு திருடனை நல்ல சிங்காரிச்சு வெள்ளை வேட்டி கட்டிவிட்டு பொட்டு வச்சு உரல்ல உக்கார வச்சு இருந்தா, அந்த சாமியாரும் பொணத்தை தூக்கிக்கிட்டு போய் புதைச்சுட்டு கிழவியை பார்க்க வந்தான், அதுக்குள்ளே கிழவி ரெண்டாவது திருடன் பொணத்தையும் முதல் பொணம் போல் சிங்காரிச்சு அதே மாதிரி உரல்ல உக்காரவச்சுட்டு பக்கத்திலே இருந்தாள், அந்த சாமியார் வந்த உடனே கிழவி அட சாமி என்ன நீ புதைச்ச பொணம் எந்திரிச்சு வந்து மறுபடியும் உரல்ல உக்காந்துக்கிச்சு அப்படின்னு சொல்ல, அந்த சாமியும் உரல பார்த்தான், உரல்ல பொணம் இருக்குது, இருட்டு வேலைங்கரதுனால அந்த சாமிக்கு ரெண்டு பொனமும் ஒரே மாதிரி தெரிய உடனே ரெண்டாவது பொணத்தையும் தூக்கிகிட்டு போய் புதைச்சுட்டு அதுமேல எலந்த முள்ளை வெட்டி வச்சுட்டு வந்தான்,

அதுக்குள்ளே நம்ப கிழவி மூணாவது பொணத்தையும் அதே போல் சிங்காரிச்சு உரல்ல உக்காரவச்சுட்டா, சாமியார் வரவும் உடனே கிழவி அட மட சாமி என்னடா நீ புதைக்கற மறுக்காவும் அந்த பொணம் வந்து உரல்ல உக்கார்ந்துக்கிசுனு சொல்ல சாமிக்கோ ஒரே ஆச்சிரியமா போச்சு, உரல்ல பார்த்தா பொணம் உக்கார்ந்துக்கிட்டு இருக்குது, இந்த தடவை சரியா புதைக்கனும்னு நினைச்சுக்கிட்டு மூணாவது பொணத்தை பொதச்சு அதுமேல பெரிய பெரிய கல்லை எல்லாம் வச்சுட்டு அந்த சாமி கிழவி வீட்டுக்கு வந்தான், அதுக்குள்ளே கிழவி நாலாவது பொணத்தையும் சிங்காரிச்சு உரல்ல உக்காரவச்சுட்டு சாமியார்கிட்ட அட கோட்டிக்கார சாமி என்ன எழவை பொதைக்கற, அந்த பொணம் மறுக்கா, மறுக்கா எந்திருச்சு வந்து உரல்ல உக்கார்துக்கிதுன்னு சொன்னா, நம்ப சாமியாருக்கு வந்ததே கோவம், பக்கத்தில இருந்த ஓலக்கையை எடுத்து பொணத்து மண்டைல நாலு போடு பொட்டு கையை காலை ஒடிச்சு கொண்டுபோய் பொதைசுட்டான், அதுக்குள்ளே கருக்க வெளுக்கற நேரமாக ஆத்துல கைகால் கழுவிக்கிட்டு இருந்தான்,

அந்த நேரம் பார்த்து பக்கத்து ஊரு வாத்தியார் வெள்ளை வேட்டி கட்டிக்கிட்டு பொட்டு வச்சுக்கிட்டு ஆத்தங்கரை ஓரத்துல வேகு வேகுனு போய்க்கிட்டு இருந்தார், நம்ப சாமியாரோ பொணம் தான் வேகு வேகுனு போகுதுன்னு நினைசுக்கிட்டான், உடனே வந்ததே கோவம் சாமிக்கு கைல இருந்த மம்பட்டியை வச்சு வாத்தி தலைல ஒரே போடு பொட்டு கொண்டுபோய் பொதைசுட்டு கிழவியை பார்த்து காசு வாங்கிட்டு போகலாம்னு ஊட்டுக்கு வந்தான்

அப்போ கிழவி கேட்டா என்ன சாமி இவ்ளவு நேரம்னு அதுக்கு அந்த சாமியார் சொன்னான், நானும் புதைக்கறது அந்த பொணம் எந்திரிச்சு வந்து உரல்ல உக்கறதும் பொழப்பா போச்சு, கடைசியா இங்க இருந்து கொண்டுபோய் பொதச்சுட்டு ஆத்துல கைகால் கழுவிட்டு இருந்தப்போ அந்த கழுத பய பொணம் வேகு வேகுனு உரல்ல உக்காரதுக்கு நடந்து வந்துக்கிட்டு இருந்தச்சு, எனக்கு வந்ததே கோவம் பொதைக்க பொதைக்க எழுந்து வரியா சவமேனு மண்டைல மம்பட்டியை வச்சு ஒரே போடு பொட்டு கொண்டோய் போதசுட்டேன்னு சொன்னான் அதை கேட்ட கிழவிக்கு புரிச்சு போச்சு வந்தது பக்கத்து ஊரு வாத்தினு உடனே வச்சா சத்தம் அட ஆக்கங்கெட்ட சாமி பொணம் எந்துரிச்சு வருதுன்னு நினைச்சு பக்கத்து ஊரு வாத்தியை கொன்னுட்டைனு உடனே சாமியார்க்கு கை, கால் எல்லாம் வெட வெடனு நடுங்க காசு கூட வாங்காம எடுத்தான் ஓட்டம் திரும்பி பாக்காம, அந்த ஊரை விட்டு பல காதம் போனபிறகுதான் திரும்பியே பார்த்தானாம்,
-------------- நன்றி கி . ரா ( கி . ராஜநாராயண் அவர்கள் )

திங்கள், 25 ஜூலை, 2011

திமுக செயற்குழு, பொதுக்குழு









மேலே நீங்கள் பார்த்த கட் அவுட்களை கடந்த 5 ஆண்டுகளில் எங்கேனும் பார்த்தது உண்டா ???

திமுக என்பதற்கு திராவிட முன்னேற்ற கழகம் என்று இருந்து அண்ணாதுரை அவர்கள் மறைவின் சமயத்தில் திராவிட முன்னேற்ற கலகம் என்று ஆனது எப்படியோ அதில் இருந்து மீண்டு வந்தது, எம்ஜியார் ஆதிமுக வை ஆரம்பித்து ஆட்சியை பிடித்த பொழுது திராவிட முன்னேற்ற கலக்கம் என்று ஆனது, எம்ஜியார் இறந்த பின் திமுக ஆட்சியை பிடித்தது அதன்பிறகு திருடர்கள் முன்னேற்ற கழகம் என்று ஆனது இப்பொழுதோ திருந்தாத முட்டாள்கள் கழகம் என்று ஆகிவிட்டது,

கோவையில் திமுக வின் செயற்குழு, பொதுக்குழு கூடியது, ஆட்சியில் இல்லாத பொழுதுதான் தான் அண்ணாவின் தம்பி, பெரியாரின் சீடன், இன மான ( எனக்கு ஒரு சந்தேகம் இந்த அன்பழகனுக்கு முதல்ல மானம் இருக்கா ? தன் மானத்துக்கு அப்புறம் தான் இன மானம் வரும், தன் மானமே இந்த பேராசிரியர்கிட்ட இல்ல அப்புறம் எங்க இனமானம் ) பேராசிரியர் அன்பழகன் நண்பர் என்பது எல்லாம் கருணாநிதிக்கு நியாபகம் வரும், செம்மொழி மாநாட்டின் பொழுது கருணாநிதியில் குடும்பத்தினர் படங்களே அதிகம் இடம்பெற்றது, ஆட்சி மாறியதும் காட்சியும் மாறியது ஆம் அண்ணா, பெரியார், அன்பழகன் படங்கள் திருச்சி சாலையில் பெரிது பெரிதாக வைக்கப்பட்டு இருந்தது, நல்ல வேலை இவர்கள் மீண்டும் ஆட்சியை பிடிக்கவில்லை, அப்படி பிடித்து இருந்தால் கடந்த இரண்டு நாட்களில் கோவை நாசமாய் போய் இருக்கும், தேர்தலில் தோல்வி அடைந்தது பற்றி எத்தகைய கவலையும் இல்லாமல் கட் அவுட் கலாச்சாரத்தை கடைபிடித்து இருந்தார்கள் என்றால் அதில் மிகை இல்லை, இந்த பொதுக்குழு எதற்கு என்றால் தோல்வியை பற்றி ஆராய்ச்சி செய்யவாம், அதற்க்கு ஏனப்பா இவ்வளவு கொடியும் கட்அவுட்களும் ???????!!!!!!!!!!!!!

நானும் அங்கு சென்று இருந்தேன், உடன்பிறப்புகள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று பார்க்க!!!!, வெள்ளையும் சொள்ளையும்மாய் திரிந்துகொண்டு இருந்ததுகள் உடன்பிறப்புகள், சனியனுக ஒவ்வொருத்தனும் என்னை கடக்கும் பொழுது ஒரே பிராண்டி வாசம், சனியபுடிச்சவனுக கூட்டமாய் நிக்கரானுக அங்க போனால் பிராண்டி வாசத்தில் வாந்தி வரும் போல் இருந்தது, குடிக்கறது தான் குடிக்கறானுக கொஞ்சம் நல்ல சரக்கா குடிக்கவேண்டாம், மட்டமான சரக்கை குடிச்சிட்டு அத்தனை கம்மனாட்டிகளும் அங்க சுத்திக்கொண்டு இருந்ததுகள், இதுல என்ன கொடுமைனா ஆண், பெண் பேதம் அங்கு இல்லை சரக்கு விசியத்தில்,

கருணாநிதிக்கு ஆட்சி போய்விட்டால் உடனே எம் ஈழத்தமிழர்கள் மேல் பாசம் பொத்துக்கொண்டு வந்துவிடும், உடனே அவர்களை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றிவிடுவார், இந்த பெரும்தகைதான் 3 மணிநேர உண்ணாவிரத நாடகத்தை நடத்தி ஈழத்தில் போர் முடிவுக்கு வந்தது என்று அறிவித்து தன் உண்ணாவிரத நாடகத்தை முடித்துக்கொண்டது அதன் பிறகுதான் போர் உக்கிரமானது முள்ளிவாய்க்கால் படுகொலைகள் அரங்கேறியது அதை பற்றி இந்த பெரும்தகை சொன்னது மழை நின்றுவிட்டது தூவானம் இருக்க தானே செய்யும் என்றது, எது முள்ளிவாய்க்கால் படுகொலைகள் இவருக்கு தூவானம், அப்படி என்றால் மழை பெய்த சமையம் இன்னும் எத்துனை உக்கரமான சேதம் விளைந்து இருக்கும், அம்மாவாச்சும் ஆட்சிக்கு வந்த உடன் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார்கள், இந்த தமிழின காவலர் கொள்ளை அடிப்பதில் தனக்கு தன் மைந்தர்களுக்கு, மகள்களுக்கு, மனைவிகளுக்கு ( மன்னிக்கவும் மனைவிகள் இல்லை அனைத்தும் துணைவிகள் ) பங்கு எவ்வளவு தர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார்

கருணாநிதிக்கு ஆட்சி போய்விட்டால் உடனே கச்ச தீவை மீட்க்க போர் பரணி கொட்டுவார், திராவிட இளைஞர்களே வாருங்கள் அண்ணாவின் கரம் பிடித்து நடந்த இந்த தம்பியின் பின் ஒற்றுமையுடன் சேருங்கள், கச்சதீவை மீட்க்க செல்வோம் என்று உணர்ச்சி பொங்க சொல்வார், இந்த அண்ணாவின் தம்பியின் ஆட்சியில் தான் கச்சதீவு தாரைவார்க்கப்பட்டது என்பதை மறைத்து சிருங்கார எழுத்தில் வாகான பேச்சில் நம்மை உசுப்பெற்றுவார், கடந்த 5 ஆண்டுகளில் இவர் ஒரு சிறு துரும்பை கூட கிள்ளி போடவில்லை கச்சதீவு விவகாரத்தில், இதை பற்றி கேட்டால் நான் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினேன் என்பார் அதற்க்கு ஒரு பெரிய விளக்கமும் குடுப்பார் , அமைச்சர் பதவி வேண்டும் என்றால் உடனே தலைநகர் நோக்கி ஓடுவார் மன்னிக்கவும் சக்கர நாற்காலியில் வேகமாக உருளும் காவாலி பய இது


வெகு சீக்கிரம் திமுக எனும் மிக பெரிய சாம்ராஜ்யம் வாரிசு அரசியலில் சரியாய் போகிறது என்பது மட்டும் உறுதியாகிவிட்டது, அதன் முன்னோட்டம் இந்த பொதுக்குழுவில் தெரிந்துவிட்டது, ஆம் பெரும்பான்மையான செயலாளர்கள் ஸ்டாலின்னை செயல் தலைவர் ஆக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்களாம், உடனே கருணாநிதி உணவு இடைவேளையை அறிவிக்க அழகிரி ஹோட்டலுக்கு சென்றுவிட்டாராம் அதன் பிறகு மாலை வரவில்லையாம் அழகிரி ( என்ன ஆட்டம் போட்டாய் கருணாநிதி உன்னால் அழிந்த குடும்பங்களின் சாபம் உன் குடும்பங்களை சும்மா விட்டுவிடுமா, நெஞ்சு துடிக்கிறது உன்னை பற்றி எழுத அதை தமிழன் நாகரிகம் தடுக்கிறது )

சுமார் 4000 கோடி அளவிற்கு தமிழக அரசு வரிவிதிப்பு செயததை கண்டித்து தீர்மானம், என்ன கொடுமை சார் இது, 1996 இடைகால நிதிநிலை அறிக்கையில் ( அதான்பா budget ) நமது பற்றாக்குறை 12 ஆயிரம் கோடி அதாவது ஆதிமுக ஆட்சியின் இறுதி நிதிநிலை அறிக்கையின் படி, அதன் பிறகு திமுக ஆட்சிக்கு வந்தது 1997 நிதிநிலை அறிக்கையின் படி தமிழக நிதி பற்றாக்குறை 24 ஆயிரம் கோடிகள்,அப்பொழுதைய திமுக ஆட்சியின் இறுதி நிதிநிலை அறிக்கையின் படி பற்றாக்குறை 53 ஆயிரம் கோடிகள், அதன் பிறகு ஆதிமுக ஆட்சியை பிடித்தது அவர்களின் இறுதி நிதிநிலை அறிக்கையின் படி பற்றாக்குறை 58 ஆயிரம் கோடிகள் ( அதாவது 2006 நிதிநிலை அறிக்கை ), மீண்டும் திமுக அரியணை ஏறியது அவர்களின் இறுதி நிதிநிலை அறிக்கையின் படி ( அதாவது 2011 நிதிநிலை அறிக்கை ) பற்றாக்குறை சுமார் 1 லட்சம் கோடிகள்

மேலே நான் குறிப்பிட்டவை எல்லாம் தமிழக அரசு இணையதளத்தில் இருந்து எடுத்த புள்ளிவிபரங்கள், எப்பொழுது திமுக ஆட்சிக்கு வந்தாலும் நமது கடன் சுமை அதிகரித்துள்ளது, சரி கடன் வாங்கி நமக்கு எதாச்சும் நல்லது செஞ்சு இருக்கிறார்கள் என்று பார்த்தால் ஒன்றும் இல்லை, அவர்கள் குடும்பங்களை ( கலைஞர், மற்றும் மாவட்ட, வட்ட தலைவர்கள் ) வளப்படுத்தவே பயன்படுத்தப்பட்டது, அதிலும் சரியாக கவனித்தால் திமுக ஆட்சிக்கு வந்த அடுத்த ஆண்டே நமது கடன் சுமை முன்பை விட இருமடங்கு ஆகின்றன, இதை மறைத்து கருணாநிதி கதை சொல்கிறது ஆதிமுக ஆட்சியில் கடன் சுமை இவ்வளவு என்று, அதற்க்கு முதல்வர் அவர்கள் பதில் சொல்லிவிட்டால் அப்பொழுதைய மற்ற மாநில கடன் சுமையை உதாரணம் காட்டி எதுகை மோனையில் எடுத்துவிடுவார், வாய் சாமார்த்தியக்காரன் பகலில் நட்சத்திரத்தை காட்டுவான், இவன் விட்டுட்டு போன கடனை சமாளிக்க வேற என்ன தான் செய்ய முடியும், முதல்வர் என்னவோ அத்யாவசிய பொருட்கள் மீது வரி வித்தது போல் கூப்பாடு போடுது இந்த காவாலி கருணாநிதி, வரி விதிப்பு எல்லாம் சரக்கு, புகையிலை, மொபைல் போன்ற லகரி வஸ்துக்கள் மீதுதான், இதில் என்ன தப்பு இருக்கிறது என்று தெரியவில்லை, திருக்குவளை தீயசக்தியே புரிந்துகொள் வெறும் வார்த்தை ஜாலத்தால் எங்களை ஏமாற்ற முடியாது,

முதல்வர் அவர்களுக்கு இந்த சனியன்களை அழிக்க நீங்க ஒன்னும் முயற்சி எடுக்க வேண்டாம், அது தன்னாலே நடக்கும் அவங்க வாரிசுகலாலேயே, நீங்க மக்களுக்கு எதாச்சும் நல்லது பண்ற வழியை பாருங்கள் ( கண்டிப்பா செய்விங்க )

திருக்குவளை தீய சக்திக்கு

தாளாண்மை செய்யான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போல் கெடும் - திருக்குறள்
( அதாவது மேலாண்மை சரியாக செய்ய தெரியாதவன் கையில் அரசு அதிகாரம் இருப்பது ஒரு போர்க்களத்தில் பேடியின் கையில் வாள் இருப்பது போல் எதற்கும் உபயோகப்படாது )



அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும் - சிலப்பதிகாரம்
( அரசியலில் தவறு செய்பவர்களுக்கு தர்மமே எமனாக வரும் )

நான் இத்துடன் சில புகைப்படங்களை இணைத்துள்ளேன், கடந்த 5 ஆண்டுகளில் இதில் இருக்கும் சில புகைப்படங்களை போல் யாராவது பார்த்து இருந்தால் எனக்கு தெரிவிக்கவும்

செவ்வாய், 19 ஜூலை, 2011

இந்திய ஊடகங்களும் சில உண்மைகளும்

இந்தியாவில் மிக பிரபலமான சில ஊடகங்கள் யாரால் நிர்வகிக்கப்படுகின்றன என்ற உண்மை நிலவரம் இது

NDTV
இந்தியாவின் மிக பிரபலமான செய்தி ஊடகம் ( 2 G இல் இவர்கள் பெயர் அடிபட்டது நினைவிருக்கலாம் ), இதை நிறுவியவர்கள் கோஸ்பெல்ஸ் ஆப் சாரிட்டி ( Gospels of charity ) இது ஒரு ஸ்பெயின் மதம் சம்பந்தப்பட்ட ஒரு நிறுவனம், இதன் CEO ப்ரநோவ் ராய், தற்சமயம் இவர்கள் அதிகமாக பாக்கிஸ்தானை விமர்சிப்பது இல்லை ஏன் என்றால் பாக்கிஸ்தான் அதிபர் NDTV யின் ஒளிபரப்பை பாக்கில் துவங்க அனுமதித்துள்ளார்,

இந்தியா டுடே
இந்த வார நாளிதழ் ஒன்றே பிஜேபி யை ஆதரித்து வந்தது, இப்பொழுது இதை NDTV வாங்கி விட்டது, அதன் பிறகு இந்த நாளிதழின் குரல் முற்றிலும் இந்துகளுக்கு எதிராக மாறிவிட்டது

CNN - IBN
இது அமெரிக்காவை தலைநகரமாக கொண்டு விளங்கும் ஒரு செய்தி நிறுவனம், இதை நிறுபவிப்பவர்கள் சொதேர்ன் பாப்டிஸ்ட் சர்ச் ( southern baptist church ) ஆகும், CNN -IBN அலுவலகங்கள் உலகம் முழுவதும் இருக்கிறது, இதை விரிவாக்கம் செய்ய 800 மில்லியன் டாலர்களை அந்த சர்ச் கொடுத்துள்ளது

டைம்ஸ் க்ரூப்ஸ்
டைம்ஸ் ஆப் இந்தியா, மிட் டே, நவ் பாரத் டைம்ஸ், ச்டர்டுஸ்ட் ( stardust ), பெமினா, விஜய் டைம்ஸ், விஜயா கர்நாடகா, டைம்ஸ் நொவ் ( 24 மணி நேர செய்தி ஊடகம் ), இன்னும் பிற

இதன் தலைவர்கள் பென்னெட் மற்றும் கோலேமன், இதற்க்கு வேர்ல்ட் கிறிஸ்டியன் மேசினரி ( world Christian Machinery ) 80% நிதி உதவி செய்கிறது, மீதி 20 % நிதி உதவி இத்தாலிய பிரமுகர் ராபர்டினோ மின்டோ அவர்களால் தரப்பட்டுள்ளது, இவர் இந்தியாவின் இத்தாலிய இதய தெய்வத்திற்கு நெருக்கமான ( யப்பா தப்பா நினைச்சுக்காதிங்க ) சொந்தக்காரர்

ஸ்டார் டிவி
இது ஒரு ஆஸ்டிரேரிலியரால் ( Australian) நடத்தப்படுகிறது, இவர் ஸ்ட். பீட்டர்ஸ் போன்டிபிகல் சர்ச் ( st. peters pontifical church ) மெல்போர்ன் இக்கு ஆதரவாக இருப்பவர்

ஹிந்துஸ்தான் குரூப்
இது பிர்லாவில் ஒரு அங்கம், இதுவும் இப்பொழுது இதுவும் டைம்ஸ் குரூப் உடன் இணைந்து செயல்படுகிறது

தி ஹிந்து
125 வருட பாரம்பரியமிக்க ஆங்கில தினசரி, தற்பொழுது இது ஜோஷ்ன சொசிஎட்டி, பெர்னே , சுவிசர்லாந்து ( Joshua society, berne, Switzerland ) ஆல் நடத்தப்படுகிறது, ஹிந்து ராம்மின் மனைவி ஒரு சுவிஸ் பெண்மணி

இந்தியன் எக்ஸ்பிரஸ்
இது இரண்டு பிரிவாக உள்ளது தி இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ( தென் இந்திய பதிப்பு ), இவற்றின் பெரும் பங்குகள் ACTS கிரிஸ்டியன் மினிஸ்டிரிஸ் ( ACTS Cristian ministries ) யிடம் தான் உள்ளது

ஆந்திர ஜோதி
MIM என்ற முஸ்லிம் கட்சியும் ஒரு காங்கிரஸ் மந்திரியும் இந்த பத்திரிக்கையை சமீபமாக வாங்கி உள்ளார்கள்

ஆசியன் ஏஜ் மற்றும் டெக்கான் ச்ரோநிகால் ( Deccan chronicle )
ஒரு சௌதிய அரேபிய நிறுவனம் தான் இதை நிர்வகிக்கிறது இதன் மூத்த ஆசிரியர் அக்பர் A . J அவர்கள்

மாத்ருபூமி
முஸ்லிம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர்களிடம் தான் அதிக பங்குகள் உள்ளது

கைரளி டிவி மற்றும் தி ச்டடேமன் ( stateman )
கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா ( மார்க்சிஸ்ட் ) கட்சியினரால் நடத்தப்படுகிறது

ஈநாடு
இது இந்தியரால் இன்றும் நடத்தப்படுகிறது அவர்தான் ராமோஜி ராவ், இவர் பெயரில் ஆந்திராவில் மிக பெரிய திரைப்பட நகரம் இருக்கிறது

சன் குழுமம், ( சன் டிவி குரூப், பண்பலை (அது தான் FM ), தினகரன், கலைஞர் டிவி குரூப் மேலும் பிற )
ஒரு களவாணி குடும்பத்தின் ஊடகங்கள் இதை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை ( ஊரு அறிந்த ரகசியத்தை பற்றி நான் என்ன சொல்வது )

இதில் கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால் இதில் சில பத்திரிக்கைகள் அந்தந்த மாநிலத்தில் அல்லது மொழிகளில் மட்டுமே புகழ் பெற்று விளங்குகிறது, ஆனால் இந்தியா முழுவதும் புகழ்பெற்ற பத்திரிக்கைகள் எல்லாம் வெளிநாட்டினரால் மட்டுமே நடத்தப்படுகிறது, இதனால் என்ன உனக்கு வந்து விட்டது என்று கேட்கலாம் அதற்க்கு பதில்

2002 இல் குஜராத்தில் நடந்த கலவரத்தில் ஹிந்துக்கள் உயிருடன் எரிக்கப்பட்டதை எந்த ஒரு ஊடகங்களும் குறிப்பாக NDTV வெளியிடவில்லை, ஆனால் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதை மட்டுமே பெரிதாக வெளிக்காட்டினர், இதற்க்கு என்ன காரணம் ????!!!!!!!!!! எனக்கு புரியவில்லை !!!!!!!!

அதுமட்டும் அல்ல முள்ளிவாய்க்கால் படுகொலைகள் எந்த இந்திய ஊடகம் சொன்னது ?, முள்ளிவாய்க்கால் படுகொலை காட்சியை கண்டு என்னால் இரண்டு நாட்கள் சரியாக சாப்பிட முடியவில்லை, அந்த அளவிற்கு கொடூரமான ஒன்றாக இருந்தது, ( you tube இல் பார்க்கவும் ), உலக படுகொலைகளில் மிக கொடூரமான படுகொலைகளில் ஒன்று முள்ளிவாய்க்கால் படுகொலை என்றால் மிகை இல்லை

உடனே நீங்கள் சொல்லலாம் 2 G விவகாரத்தை CNN - IBN தான் அதிகமாக வெளியிடுகிறது என்று அதற்க்கு காரணம் NDTV ப்ரநோவ் ராய் அதில் ஈடுபட்டதாக தகவல்கள் ( நீரா ராடியா டேப் ) வெளிவந்து உள்ளது எனவே இதைவைத்து NDTV யை முடித்து தான் மட்டும் தனிஆவர்த்தனம் ( Monopolic ) செய்தி ஊடகத்தில் செய்யமுடியும் என்று CNN நினைக்கிறது, அதுதான் காரணமே தவிர தேச பக்தி ஒன்றும் கிடையாது ( வெளிநாடவனுக்கு இந்திய தேச பற்று எப்படி வரும், நமக்கு தான் வெளிநாட்டு பற்று ( மோகம் ) இருக்கும் அது போல் அவனும் இருப்பானா ???? )

இந்திய தேச பாதுகாப்பும் இதில் அடங்கியுள்ளது எப்படி அடங்கியுள்ளது என்று நினைக்கலாம், உதாரணமாக ஜூவி ( விகடன் குழுமம் ) ஒரு புலனாய்வு பத்திரிக்கை, இதில் வரும் சில செய்திகள் யார் சொல்லியது என்று தெரியாது ஆனால் அது உண்மையாக இருக்கும், அது சில மாதங்களில் வெளியில் தெரிந்துவிடும், ஒரு மாநிலத்தில் உள்ள ஒரு பதிரிக்கைக்கே சில ரகசிய செய்திகளை சொல்வதற்கு ஆட்கள் இருக்கும் பொழுது ( விகடன் குழுமம் தமிழரால் நடத்தப்படும் ஒரு பாரம்பரியம் மிக்க பத்திரிக்கை, இவர்கள் ஒன்றும் தவறான செயலுக்கு துணைபோக மாட்டார்கள், ஏன் என்றால் மறைந்த மதிப்பிற்குரிய திரு. வாசன் அவர்களும் அவரின் மைந்தர்களும் சுத்தமான தமிழ் ரத்தம் ஓடும் இந்தியர்கள் ), இந்தியா முழுவதும் தன் கொடூர கரங்களை நீட்டிக்கொண்டு இருக்கும் வெளிநாட்டு பத்திரிக்கைகளுக்கு ஆட்கள் இருக்க மாட்டார்களா ?, அரசு எடுக்கும் முக்கிய முடிவுகள், ராணுவ நடவடிக்கைகள் எல்லாம் இவர்களுக்கு தெரியாமலா போய்விடும், அப்படி தெரியும் பொழுது அவர்கள் அதை அமெரிக்காவிற்கும் இந்தியாவை எதிர்க்கும் நாடுகளுக்கும் தெரிவிக்க மாட்டார்களா ?,

நம் ஊரில் ஒரு சொல்வாடை உண்டு திரும்ப திரும்ப கூறினால் பொய்யும் உண்மையாகும், இந்திய வெளிநாட்டு ஊடகங்கள் ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்ல சொல்ல அது உண்மை என்று மக்கள் நம்பிவிடும் அபாயம் இருக்கிறது, அது மட்டும் அல்ல இது நம் நாட்டு பொருளாதாரம் சார்ந்த ஒரு பிரச்னை

இந்தியா முழுவதும் இருக்கும் ஒரு பிரபலமான ஆங்கில பத்திரிக்கையின் வருமானத்தை கணக்கிட்டு பார்ப்போம்

பத்திரிக்கைகள் வருமானம் பெரும் வழிகள்

பத்திரிக்கைகள் விற்று வரும் வருமானம்
விளம்பரம் செய்து வரும் வருமானம்

விளம்பரம் செய்யும் வழிகள் :
4 வரி, 8 வரி விளம்பரங்கள், கால் பக்க விளம்பரம், அரை பக்க விளம்பரம், முழுபக்க விளம்பரம்

4 வரி விளம்பரம் - சுமார் 750 ருபாய், 8 வரி விளம்பரம் - சுமார் 1500 ருபாய், 16 வரி விளம்பரம் - சுமார் 4 ,000 ருபாய், கால் பக்க விளம்பரம் - 20,000 , அரைபக்க விளம்பரம் - 40 ,000 , முழுபக்க விளம்பரம் 80 ,000 - 1,00 ,000 ருபாய் ( இந்த தகவல்கள் நான் ஒரு தமிழ் பத்திரிக்கை அலுவலகத்தில் விசாரித்து இதை விட ஆங்கில பத்திரிக்கைகள் அதிகமாக தான் வாங்கும் )

ஒரு நாளைக்கு

4 வரி விளம்பரங்கள் - 50 கொடுத்தால் - 37 ,500
8 வரி விளம்பரங்கள் - 30 கொடுத்தால் - 45 ,000
16 வரி விளம்பரங்கள் -20 கொடுத்தால் - 80 ,000
கால்பக்க விளம்பரங்கள் - 10 கொடுத்தால் - 2,00,000
அரைபக்க விளம்பரங்கள் - 6 கொடுத்தால் - 2,40,000
முழுபக்க விளம்பரங்கள் - 1 கொடுத்தால் - 1,00,000
-------------------------------
மொத்தம் 7,02,500 ( தோராயமாக )

இந்த மதிப்பு என்பது ஒரு பதிப்பில் மட்டும், அதாவது கோவையில் இருந்து வரும் ஆங்கில பத்திரிக்கை பதிப்பின் ( covai edition ) விளம்பர மதிப்பு, அதே பத்திரிக்கையின் மற்றைய நகரங்களில் இருந்து வரும் பதிப்பு இதே போல் இருந்தால் இந்தியா முழுவதும் அந்த பத்திரிக்கை எத்தனை நகரங்களில் பதிப்புகள் இருக்கும் அதன் மொத்த மதிப்பை கணக்கிட்டு பாருங்கள், சுமார் 100 பதிப்புகள் இந்தியா முழுவதும் இருக்கட்டும் அப்பொழுது மொத்த மதிப்பு

ஒரு நாளைக்கு - 7,02,50,000 (இது தோராயமாக கண்டிப்பாக 100 பதிப்புகளுக்கு மேல் தான் இருக்கும் )

ஆண்டிற்கு - 2564,12,50,000 ( விளம்பர மதிப்பு மட்டும் )

சராசரியாக ஒரு பத்திரிக்கை ஒரு நாளைக்கு 5,00,00,000 விற்பனையாகட்டும், ஒரு பத்திரிக்கையின் விலை 2 ருபாய் என்று வைத்துக்கொள்வோம்,

ஒரு நாள் விற்பனை - 10,00,00,000 ரூபாய்கள்

ஆண்டு விற்பனை - 3650,00,00,000 ரூபாய்கள்

விளம்பர வழி வருமானம் - 2564,12,50,000 ரூபாய்கள்
பத்திரிக்கை விற்பனை வழி வருமானம் - 3650,00,00,000 ரூபாய்கள்
-------------------------
மொத்தம் - 6214,12,50,000 ரூபாய்கள் ( தோராயமாக )

ஆக மொத்த ஆங்கில பத்திரிக்கைகள் 100 என்று வைத்துக்கொள்வோம் , அப்பொழுது இந்திய நாட்டின் பத்திரிக்கை வருமானம் 6,21,412,50,00,000 ரூபாய்கள் ( 6 லட்சம் கோடிகள்)

ஊடகங்கள் வருமானம் :

ஒரு விளம்பரத்திற்கு அவர்கள் 50,000 ரூபாய்கள் வாங்குகிறார்கள், ஒரு நாளைக்கு அவர்கள் 1000 விளம்பரங்கள் குடுக்கட்டும் அதன் மதிப்பு 5,00,00,000, ஆண்டு வருமானம் 1825,00,00,000, அதுமட்டும் அல்ல ஒவ்வொரு cable operator களிடம் இருந்து இவர்கள் சுமார் 20,000 ரூபாய்கள் வாங்குகின்றனர், அப்படி பார்க்கும் பொழுது சுமார் 10,00,000 cable operator கள் இந்தியா முழுவதும் இருக்கட்டும் அவர்கள் வழி வருமானம் ஒரு ஆண்டுக்கு 2000,00,00,000

மொத்த வருமானம் - 3825,00,00,000 ரூபாய்கள் ( இதில் என்ன பிரச்னை என்றால் இந்த மதிப்பு எந்த அளவிற்கு சரியானது என்று சொல்ல முடியாது ஏன் என்றால் விளம்பரங்கள் ஒளிபரப்புவது என்பது நிமிட கணக்கில் பணம் வாங்குகிறார்கள், குறைந்த பட்ச தொகை என்பது 50,000 ரூபாய்கள் என்பது எனக்கு உறுதியாக தெரியும், ஏன் நண்பர் ஒருவர் விளம்பர துறையில் இருக்கிறார் அவர் மூலமாக நான் தெரிந்து கொண்டது )

சரி சுமாராக 100 தொலைக்காட்சிகள் இருக்கட்டும் மொத்த மதிப்பு 3,82,500,00,00,000 ( 3 லட்சம் கோடிகள் )

ஆக மொத்தம் பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்களின் வருமானம் சுமார் ஒன்பது லட்சம் கோடிகள் என்றால் மிகையாகாது, இந்த வருமானங்களில் பலன் அடைவது யார் ????, ஒரு இந்திய சமூகமா ? இல்லை ஒரு இந்திய மாநிலம், ஒரு இந்திய மாவட்டம், ஒரு இந்திய மாநகராட்சி, இந்திய ஊராட்சி , ஒரு இந்திய குடும்பம் ( உடனே சொல்லவேண்டாம் எங்கள் தமிழின காவலர் குடும்பம் பலன் அடைகிறது என்று ), கடைசிக்கு ஒரு ஏழை இந்தியன் இல்லை இந்த வருமானம் எல்லாம் இந்தியாவை விட்டு வெளியே செல்கிறது அல்லது இங்கயே இருந்து இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது,

இதை எப்படி சொல்வது என்று எனக்கு தெரியவில்லை அதற்க்கான தமிழில் சொற்களை தேட நான்கு பேர் கொண்ட குழுவை நியமித்து ஆராய்ச்சி செய்யச்சொல்லி இருக்கிறேன், விரைவில் கண்டுபிடித்து விடுவேன், கலங்க வேண்டாம் :),

கயமைதனதிற்க்கு உச்சகட்டம் என்பது இதுதானோ !!!!!!!!!!!!!, ஆங்கிலயர்கள் நம் மண்ணிற்கு வந்தது நம் மண்ணை ஆளவேண்டும் என்ற ஆசையில் அல்ல, இங்கு வியாபாரத்தை பெருக்க வேண்டும் என்றுதான் ஆனால் நடந்தது என்ன அதற்க்கு 400 ஆண்டுகால அடிமை வரலாறு தான் சாட்சி, அதே போல் இன்று வெளிநாட்டு பத்திரிக்கைகளும், ஊடகங்களும் வியாபாரத்தை பெருக்க வேருன்றி இருக்கிறார்கள் ( கால் பதித்து, கை ஊன்றி , விதை நட்டு, அந்த விதை செடியாகி மரமாகி விட்டது ), அவர்களின் கோர விழுதுகள் முளைத்து நம்மை அடிமையாக்கும் முன்பு விழித்திடுவோம், வேண்டாம் இன்னும் ஒரு சுகந்திர போராட்டம் நமக்கு, தேவை முன்னேற்ற போராட்டம் மட்டுமே

சிறு துரும்பு என்று நாம் அலட்சியமாக இருப்பது தான் நம் கண்களில் விழுந்து இறுதியில் பார்வையை பறித்திட காரணமாக இருக்கும், எல்லோரிடமும் இதை சொல்லுங்கள்

நக்சல்ஸ் நல்லவங்களா கெட்டவங்களா ????????

தி டைம்ஸ் புத்தகத்தை படித்துக்கொண்டு இருந்த பொழுது அதில் நக்சல் பற்றிய ஒரு கட்டுரை எழுதி இருந்தது, அதில் சில கணக்கெடுப்பு எழுதி இருந்தார்கள் அதை உங்களுக்கு இங்கு தருகிறேன்,

இந்தியா முழுவதும் நக்சல்ஸ் இருக்கும் மாவட்டங்கள்
நக்சல்ஸ் பற்றி தெரியுமா 54 85


நக்சல்ஸ் பற்றி எத்தனை நாட்களாய் தெரியும்

சுமார் 5 வருடங்களுக்கு முன்பிருந்து - 44
2 லிருந்து 5 வருடங்களுக்குள் - 34
தற்சமயம் தான் தெரியும் - 32

பின்வருபவைகள் பற்றிய செய்திகள் அறிந்தது

இந்தியா முழுவதும் சத்தீஸ்கர் மட்டும்
பசுமை வேட்டை ( Green hunt) 27 28
மாவோயிஸ்ட் தலைவர் ஆசாத் 20 24
இறப்பு
CRPF வீரர்கள் கொல்லப்பட்டது 45 50
அருந்ததி ராய் கட்டுரைகள் 6 9

நக்சல்ஸ் என்பவர்கள் யார் ?
அடிப்படை உரிமையற்ற ஏழைகள் 26
புரட்சியாளர்கள் 5
பொதுவுடைமை சித்தாந்தவாதிகள் 7
எதிர்மறை சித்தாந்தவாதிகள் 7
மற்ற சித்தாந்தவாதிகள் 6
எதுவும் தெரியாது 49

நக்சல்ஸ் இயக்கத்தில் இருப்பவர்கள்

உள்ளூர் இளைய ஆதிவாசிகள் 12
சுற்றுப்புறத்தில் உள்ள ஆதிவாசிகள் 13
எங்கியாகினும் இருக்கும் ஆதிவாசிகள் 19
அல்லாதவர்கள்
மற்றவர்கள் 5
தெரியாது 51

நக்சல்ஸ் பெருகுவதற்கு காரணம்

முன்னேற்றம் இல்லாமை 21
சமுக சமமின்மை 7
உதவியின்மை 6
நிர்வாக தோல்வி 6
மாநில, மத்திய அரசின் தோல்வி 5
தெரியாது 55

நக்சல்ஸ்களின் கொள்கை

துப்பாக்கி முனையில் ஏழைகளுக்கு நீதியை 12
வழங்க வைப்பது
அரசாங்கத்தை தூக்கி எறிவது 11
வன்முறையின் மூலம் அதிகாரத்தை 11
கைப்பற்றுவது
அதிகாரத்தையும், சொத்தையும் 14
காப்பாற்ற
தெரியாது 52

நகசல்கள் பற்றிய அபிமானம்

அனுதாபிகள் 10
மிருதுவான அனுதாபிகள் 37
மிருதுவான எதிர்ப்பாளர்கள் 30
கடும் எதிர்ப்பாளர்கள் 23

எண்கள் அனைத்தும் சதவீதத்தின் அடிப்படையில் அமைந்தது

இதை பார்க்கும் பொழுது ஒன்று மட்டும் நன்றாக தெரிகிறது தான், தன் குடும்பம் இதுமட்டுமே முக்கியம் என்று நாட்டில் பாதி மக்கள் இருக்கின்றனர், இந்த பத்திரிக்கை சொல்வது எல்லாம் உண்மை என்று நாம் எடுத்துக்கொள்ள முடியாது ஏன் என்றால் இவர்களுக்கு ஆட்சியாளர்கள் ஆதரவாக இருந்தால் நக்சல்ஸ் எட்டிக்காய் போல், ஆட்சியாளர்கள் ஆதரவாக இல்லை என்றால் நக்சல்ஸ் இனிப்பான மாங்கனி போல்

அடிப்படையில் பார்க்கும் பொழுது இந்திய நாட்டின் குடிமகன்களுக்கு [ வேறு அர்த்தத்தை எடுத்துக்கொள்ள வேண்டாம் :), அப்படியே எடுத்துக்கொண்டாலும் அதற்க்கு நான் பொறுப்பல்ல ] வழங்கப்படும் அடிப்படை உரிமைகள் கூட கிடைக்காமல் அல்லாடும் இனத்தின் கோபத்தின் வெளிப்பாடு என்றால் மிகையில்லை, நக்சல்ஸ் கோருவது தனிநாடு அல்ல நாங்களும் இந்தியர்கள்தான் நாங்கள் வாழ்வதற்கும் வழி காட்டுங்கள் என்பதுதான் அதை புரிந்துகொள்ளாத காங்கிரஸ் அரசு அவர்களை அடக்க பார்க்கிறது, நாம் எல்லாம் ஊடகங்களின் மாயையில் சிக்கிக்கொண்டு ஊடகங்கள் சொல்வது எல்லாம் உண்மை என்று மாக்கள் போல் இருக்கின்றோம், பாவம் அவர்களுக்கு அந்த குடுப்பினை இல்லாததால் அவர்கள் சிந்தித்துக்கொண்டு இருக்கிறார்கள்,

ஆதிவாசிகளை விரட்டிவிட்டு அந்த இடங்களை அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு வழங்கவே காங்கிரஸ் அரசு விரும்புகிறது, கொஞ்சம் யோசிச்சு பாருங்கள் ஊட்டி மற்றும் கொடைக்கானல் அல்லது இந்தியாவின் ஏதாவது ஒரு மலை பிரதேசத்திற்கு நீங்கள் அனைவரும் சென்று இருப்பிர்கள், பசுமை நிறைந்த அந்த மலை முழுவதிலும் இருக்கும் பசுமையை அழித்துவிட்டு நம் ஊர்களில் இருக்கும் கல் குவாரி போல் வெட்டி வைத்து இருந்தால் உங்களால் பார்க்க இயலுமா ????, அதை தான் இந்த காங்கிரஸ் அரசு சத்தீஸ்கர் மாநிலத்தில் செய்துகொண்டு இருக்கிறது, அதை முன்னின்று நடத்தும் ஒரு _______ ( இந்த கோட்டை உங்களுக்கு தெரிந்த வார்த்தைகளை போட்டு நிரப்பிக்கொள்ளவும், நான் நினைக்கும் வார்த்தை என்னால் எழுத இயலாத அளவிற்கு மோசமானது ) அவன் தான் சிதம்பரம், இவன் ஒரு தமிழன் என்பதில் நாம் எல்லோரும் தலைகுனிய வேண்டும், உங்கள் வீட்டை ஒருவன் நாசப்படுதினால் பார்த்துக்கொண்டு இருப்பிர்களா ???? அதே போல் தான் அங்கு வசிக்கும் ஆதிவாசிகளும்

நக்சல்ஸ் தனிநாடு கேட்க்கிறார்கள் என்று நீங்கள் சொல்லலாம், அது உண்மை இல்லை அப்படியே அவர்கள் கேட்டாலும் சில இடங்களில் மட்டுமே கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள் அதற்க்கு காரணம் அண்டை நாடுகளின் துண்டுதல் தான் காரணம், ( உங்களுக்கு தெரியாத ஒரு செய்தி சமீபத்தில் சீனாவில் தொழிற் கண்காட்சி நடைபெற்றது அப்பொழுது அங்கு இந்திய தேசிய கொடி கிழித்து வீசப்பட்டது அதை எந்த ஒரு ஊடகமும் இந்தியாவில் சொல்லவில்லை, நானும் ஆதாரம் இல்லாமல் சொல்லவில்லை, என் நண்பன் அந்த கண்காட்சிக்கு சென்றுவந்தான் அவன் மூலமாக நான் இந்த செய்தியை அறிந்தேன், நம் தேசியக்கொடி என்ன அவ்வளவு மட்டமாகவா போய்விட்டது, போகிறபோக்கில் என்ன என்ன நடக்கப்போகிறதோ ), அதை நாம் எளிதில் முறியடித்து விடலாம் எப்படி என்றால் மற்ற மாநிலங்களில் இருக்கும் நக்சல்ஸ் ( ஆதிவாசிகள் ) களின் பிரச்சனைகளை சுமுகமாக களைந்து விட்டால் தனி நாடு கேட்க்கும் நக்சல்களும் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள், அவர்களையும் சுமுகமாக சமாளித்துவிடலாம், இதற்க்கு பெரிய படிப்பு படித்த அதிகாரிகள் வேண்டாம் அரசியவாதிகள் வேண்டாம், உச்சகட்ட அதிகாரத்தை கையில் கொண்டு இருக்கும் நெஞ்சில் ஈரமுள்ள ஒரு மனிதர் போதும்

இந்தியாவின் இத்தாலிய இதய தெய்வத்தால் மரண வியாபாரி என்று போற்றப்படும், ஐக்கிய நாடுகளின் சிறந்த சேவைக்கான விருதை பெற்ற எங்கள் நரேந்திர மோடி அவர்கள் குஜராத்தில் இருந்த நக்சல்களுக்கு அழைப்பு விடுத்தார் எப்படி " நீங்கள் உங்கள் ஆயுதங்களை கீலே போடவேண்டாம் ஆனால் பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் உங்களின் உரிமைகள் உங்களுக்கு கிடைக்க நான் போராடுகிறேன், உங்கள் உரிமைகள் மறுக்கப்படாது, உங்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிப்பாக இந்த அரசாங்கத்தால் குடுக்கப்படும் " என்று, அதன் பிறகு இதுவரை குஜராத்தில் நக்சல்ஸ் பிரச்னை ஏதுமில்லை, இதை ஏன் மத்திய அரசு செய்ய மறுக்கிறது ?????????????

இறுதியில் நக்சல்ஸ் நல்லவங்களா கெட்டவங்களா ????????? இதற்க்கு பதில் தெரியலையப்பா ஆஆஆஆஆஆஆ
( என்னை பொறுத்தவரை உரிமைக்காக போராடும் போராளிகள் அனைவரும் நல்லவர்களே )

காங்கிரசும் அதன் கயமை தனமும் II

முந்தைய பகுதியில் சாத்தானின் குழந்தை ( காங்கிரஸ்) பிறந்து வளர்ந்த கதையை சொல்லி இருந்தேன், அந்த சாத்தான் தன் வேலையை காட்ட ஆரம்பித்தது 1991களில் இருந்து தான், ராஜீவ் இறந்தார், அந்த அலையில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது, இங்கு ஆரம்பித்தது இந்தியாவிற்கு அஷ்டமத்து சனி

என் நண்பனிடம் இதை ( காங்கிரசும் அதன் கயமை தனமும் ) பற்றி பேசிக்கொண்டு இருந்தேன், அப்பொழுது எங்கள் பேச்சு அவசரநிலை பிரகடனம் ( Emergency ) நோக்கி சென்றது, அப்பொழுது என் நண்பன் சொன்னான், இந்திரா அவர்கள் கைது செய்த தலைவர்கள் எல்லாம் இந்துக்களை மட்டும் தான் என்று சொன்னான் அது தவறு முஸ்லிம் லீக் கட்சின் தலைவர் இக்பால் அகமத் குஸ்டிவாலா அவர்களும் மற்றும் அவர்கள் கட்சியின் இதற தலைவர்களும் கைதுசெய்யப்பட்டனர், அப்பொழுது முஸ்லிம் லீக் கட்சி மட்டுமே இருந்தது வேறு எந்த ஒரு முஸ்லிம் கட்சியும் கிடையாது, வரலாறு மிக முக்கியம் நண்பா !!!!!!!!!

நரசிம்மராவ், இந்தியர்களின் சிரிப்பை தொலைக்க காரணமான சிரிப்பை மறந்த இந்திய பிரதமர், இவரின் ஆட்சி காலத்தின் பொழுதான் இந்தியாவின் பொருளாதாரத்தின் தந்தையான மாண்பு மிகு மன்மோகன் சிங் அறிமுகமாகிறார் இந்திய அரசியலுக்கு, இவரின் சிறப்பு உங்களுக்கு தெரியுமா ? இதுவரை அவர் தேர்தலில் நின்று மக்களை சந்தித்து வெற்றிபெறவில்லை எல்லாம் பின்வாசல் ( மேலவை ) வழியாக மந்திரியாகவும், பிரதம மந்திரியாகவும் ஆனார், நவீனமயமாக்கல் என்ற பெயரில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்திய வாசலை திறந்து வைத்து " வறுமையில் வாடும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்திய வாசலை திறந்துவைத்து வாழ்வு தந்த வள்ளல் " என்று பெயர் பெற்றவர்கள் மன்மோகன் மற்றும் நரசிம்மராவ் அவர்கள், இதை பற்றி இன்னும் சொல்கிறேன், இப்பொழுது இன்னும் ஒரு முக்கியமான செய்திக்குள் நுழைகிறோம்

மதசார்பின்மை இது தான் காங்கிரஸ் இன் கொள்கை, இந்த கொள்கை காற்றில் பறக்கவைத்த நாள் 1992 டிசம்பர் 6 , பாபர் மசூதி இடித்த நாள், உடனே அதை இடித்தது பிஜேபி, அப்பொழுது அங்கு பிஜேபி ஆட்சி தான் நடந்தது என்று வரிந்து கட்டிக்கொண்டு நீங்கள் சொல்லலாம், ஆம் அப்பொழுது பிஜேபி ஆட்சி தான் அங்கு நடந்தது அப்பொழுதைய முதல்வர் திரு, கல்யாண்சிங் அவர்கள், அயோதியா பிரச்சனைக்கு பிறகு கல்யாண்சிங் கூறி இருந்தார் " நான் பிரதம மந்திரிக்கு சொல்லிவிட்டேன் தயவு செய்து துணை ராணுவத்தை அயோத்திக்கு அனுப்புங்கள் என்று ஆனால் மத்தியஅரசு கையை கட்டி கொண்டு வேடிக்கை மட்டும் பார்த்தது " என்று,

அதுமட்டும் அல்ல அயோத்திய இடிப்பு 10 மாதத்திற்கு முன்பே முடிவு செய்யப்பட்டது பிஜேபி மற்றும் இந்து சங்கங்களால், இதை முன்னால் IB ( intelligent bureau) துணை தலைவர் மலாய் கிருஷ்ணா தர் அவர்கள் அரசாங்கத்திடம் சொல்லி இருக்கிறார் ( இதை 2005 இல் அவரே தன் சுயசரிதையில் எழுதி இருந்தார் ) ஆனால் காங்கிரஸ் அரசு வேண்டும் என்றே வேடிக்கை பார்த்து உள்ளது, ஏன் என்றால் மசூதியை இடிக்கவிடாமல் தடுத்தால் இந்துக்களுக்கு விரோதி என்ற முத்திரை குத்தப்பட்டு விடும் இனிமேல் ஆட்சிக்கு வரமுடியாது என்று காங்கிரஸ் நினைத்தது தான் காரணம், சரி முஸ்லீம்களை எப்படி ஏமாற்றுவது என்று நினைத்தது காங்கிரஸ், பாபர் மசூதி டிசம்பர் 6 இல் இடிக்கப்பட்ட உடன் அடுத்த நாளே 356 சட்ட உதவியுடன் ஆட்சியை கலைத்து நாங்கள் மிகவும் நல்லவர்கள் என்று காட்டிகொண்டது, என் கேள்வி என்னவென்றால் ஏன் 144 தடை உத்தரவை பிறப்பித்து இதை தடுத்து இருக்க முடியாது ( கேட்டால் நாங்கள் அதை செய்து இருந்தால் இந்தியா முழுவதும் பற்றி எரிந்து இருக்கும் என்று சொல்வார்கள் இந்த காங்கிரஸ் கனவான்கள் ) கடைசியாக 1989 இல் காங்கிரஸ் கட்சி தன் ஆட்சியை உத்திர பிரதேசில் இழந்தது, இதில் என்ன கொடுமை என்ன வென்றால் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு உத்திர பிரதேசில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியவில்லை,

இப்பொழுது நான் சொல்லபோவது காங்கிரஸ் கட்சியின் மதவாதத்தின் உச்சகட்டம், அவர்கள் பதவியை காப்பாற்ற, ஆட்சியை கைப்பற்ற எந்த அளவிற்கு கீழ்த்தரமாக செயல்படுவார்கள் ( ஒரு பன்றி போல் ) என்று படித்து பாருங்கள்,

ஹேமந்த் கார்கே இந்த பெயர் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை, இந்திய காவல்துறையின் ஒரு வைரம் என்று சொல்லலாம், மும்பை தீவிரவாத எதிர்ப்பு படை தலைவர், தாஜ் ஹோட்டல் தாக்குதலில் வீரமரணம் அடைந்தார் ( மும்பையை கலக்கிய பல நிழல் உலக தாதாக்களை ஓடி ஒளிய செய்தவர், encounter specialist ), மும்பை மக்கள் ஆராதிக்கும் ஒரு வீர புருஷர், இந்த மனிதர் இறந்ததை ஆதாயமாக்க திக்விஜய் சிங் எனும் காங்கிரஸ் நரி சொன்னது என்ன தெரியுமா ?, கார்கே அவர்கள் இந்த நரியிடம் சொன்னாராம் என்னை கொல்பவர்கள் இந்து சங் பரிவார் மட்டுமே என்று , ( எங்காவது கேள்விப்பட்டு இருக்கிறீர்களா குள்ள நரியிடம் சிங்கம் தன் மரண பயத்தை பற்றி சொன்னதாக ), அதற்க்கு கார்கே அவர்களின் மனைவி திருமதி . கார்கே அவர்கள் எதிர்த்து என் கணவர் அப்படி ஒன்றும் சொல்லவே இல்லை, உங்கள் அரசியல் சாக்கடையை என் கணவர் மேல் வீசாதிர்கள் என்று செருப்பால் அடித்தது போல் சொல்லிவிட்டார்,

இதைவிட கேவலமான ஒன்று உள்ளதா !!!!!!!!!?????????,

எங்கே காங்கிரஸின் மதசார்பின்மை,

நம்மை ஏமாற்றிக்கொண்டு இன்னமும் நம்மை ஆட்சி செய்துகொண்டு இருக்கிறது, அதன் பிறகு 1996 இல் தனது ஆட்சியை இழந்த காங்கிரஸ் பலதுண்டுகளாக உடைந்தது ( இது காங்கிரஸின் வழக்கம் தானே என்று சொல்லவேண்டாம் :) ) , 1997 இந்த ஆண்டு ஒரு சாபக்கேடான ஆண்டு, இந்தியாவிற்கு சுகந்திரம் வாங்கித்தந்த கட்சி, திலகர், நேதாஜி, நேரு, இந்திரா, கர்மவீரர், தியாகி சத்தியமூர்த்தி, ராஜாஜி, இன்னும் பல ( இந்தியாவில் பிறந்து இந்திய இரத்தம் ஓடும் ) மாபெரும் தலைவர்களை கண்ட கட்சி, ஒரு சரியான தலைமை இல்லாமல் தடுமாறியது ( என்ன கொடுமை சார் ), அப்பொழுதான் இந்தியாவின் இத்தாலிய இதய தெய்வம், கருணை பெரும்கடல், காண்பவர்கள் கை கூப்பும் கண்கண்ட தெய்வம் சோனியா அவர்கள் ( ஹய்யய்யோ எனக்கு ஒன்னும் தெரியாதுங்க இந்த புகழுரை எல்லாம் காங்கிரஸ் கட்சிகாரனுக சொன்னது, இந்தியாவின் இத்தாலிய இதய தெய்வம் இதில் அடிக்கோடிட்ட பகுதி மட்டும் அடியேனின் கைவண்ணம் ஹி ஹி ஹி ), கட்சியில் காலடி வைத்தார், ( என்ன செய்வது தமிழனுக்கு நிகராக மரியாதை தருவதில் யாரும் இல்லை என்று சொல்லிக்கொண்டு திரிகிறோம் அந்த ஒரே காரணத்தில் தான் சோனியாவை அவர் , இவர் என்று அழைக்கிறேன் இல்லை என்றால் வண்டி வண்டியாக வார்த்தைகளை அடைமொழியாக போட்டு எழுதிருப்பேன் )

1997 இல் அடிப்படை உறுப்பினர், 1998 இல் கட்சியின் தலைவர், இந்த குடுப்பினை யாருக்கு கிடைக்கும் எங்கள் அன்னை சோனியாவை தவிர ( இதுவும் நான் சொல்லலை சொன்னது காங்கிரஸ் கனவான்கள் ), 1999 இல் பெல்லாரியில் சுஸ்மா ஸ்வராஜ் யை வென்றார், [ எங்கடா சந்தர்ப்பம் கிடைக்குமுன்னு பார்த்துக்கிட்டு இருந்த சுஸ்மா இப்போ பிஜேபி நாடாளுமன்ற தலைவராகி போட்டு வாங்கு வாங்கு என்று வாங்கிக்கொண்டு இருக்கிறார் :) ] அப்பொழுது சோனியா எதிக்கட்சி தலைவராக பொறுப்பேற்றார், 2004 பொது தேர்தல் நடந்து முடிந்தது, இந்தியனின் தலையின் மீது பேய்களும், பிசாசுகளும் குடியேறிய வருடம், ஆம் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தது, சோனியா தான் அடுத்த பிரதமர் என்ற நிலையில் பிஜேபி செய்த தகராறு காரணமாக பொருளாதார மேதை, எடுப்பார் கைப்பிள்ளை, திரு. மன்மோகன்சிங் அவர்கள் பிரதமராக பொறுப்பேற்றார், மற்றும் ஒரு பொருளாதார மேதை திரு . சிதம்பரம் அவர்கள் பொருளாதார துறை மந்திரியாக பொறுப்பேற்றார், அதன் பின் தனியார் மயமாக்கள் என்ற பெயரில் பொது துறை நிறுவனங்களை விற்க இந்த இரண்டு பொருளாதார மேதைகளும் முயன்றனர், கம்யூனிஸ்ட் கட்சியினரின் கடுமையான எதிர்ப்பில் கைவிட்டனர்,

வங்கிகளை அவர்கள் தனியாருக்கு தாரை வார்க்க முற்பட்ட பொழுது அதை எதிர்த்து வங்கி துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தனர், அப்பொழுது வங்கி ஊழியர்களின் சங்க அகில இந்திய தலைவர் பேட்டியை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன், அப்பொழுது நான் அவர்களை திட்டிக்கொண்டு இருந்தேன், அந்த தலைவர் பெயர் எனக்கு மறந்து விட்டது, ஆனால் அவர் சொன்ன வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்பது பின்னாளில் எனக்கு புரிந்தது, அவர் சொன்ன வார்த்தைகள் " வங்கிகள் தனியார்மயமாக்கப்பட்டால் வங்கிகளை வாங்கும் அல்லது புதிதாய் தொடங்கும் வங்கிகள் வெளிநாட்டு வங்கிகள் மட்டுமே அதுமட்டும் அல்ல அதனால் ஏற்படும் தீமை என்பது ஒருவேளை உலக அளவில் பொருளாதார சரிவு ஏற்படும் பொழுது தனியார் வங்கிகள் திவால் என்று அறிவித்தால் என்ன நடக்கும் ?, இன்றைய நாட்களில் நடுத்தர வர்கத்தினர் தங்கள் சேமிப்பை அதிகமாக வங்கிகளில் தான் வைத்து உள்ளார்கள், அந்த பணம் முழுவதும் போய்விடும், நடுத்தர வர்கத்தினர் தானாக ஏழைகள் வரிசையில் இணைந்து விடுவார்கள், இந்திய பொருளாதாரம் என்பது நம் வங்கிகளையும் சார்ந்து உள்ளது அப்படி பார்க்கும் பொழுது நம் பொருளாதரத்தை மட்டும் அல்ல நாட்டு மக்களின் பணங்களையும் வெளிநாட்டு வங்கிகளிடம் குடுத்துவிட்டு நாம் அவர்களிடம் எல்லாவற்றிற்கும் கையேந்த வேண்டிய நிலை ஏற்படும் என்று சொன்னார், அப்பொழுது நான் இது எல்லாம் கற்பனையில் தான் நடக்கும் என்று சொல்லிக்கொண்டு இருந்தேன்

ஆம் நடந்தது உலக பொருளாதார சரிவு, அதில் மிகவும் அதிக அளவில் பாதிக்கபடாத நாடுகளில் இந்தியா முதல் முன்று இடத்தில் இருந்தது என்று சொன்னால் மிகையாகாது, அதற்க்கு காரணம் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது தான், அதற்காக இந்திரா காந்திக்கு மிக பெரிய வணக்கங்களை சொல்லவேண்டும், இந்திரா அவர்களின் தொலைநோக்கு பார்வை காரணமாக இந்தியா தப்பித்து, அந்த தொலைநோக்கு பார்வை ஏன் முன்னால் ரிசர்வ் வங்கி கவர்னர் மன்மோகன்சிங்க்கு இல்லாமல் போய்விட்டது, இல்லை நம்மை எல்லாம் வெளிநாட்டு வங்கிகளிடம் அடமானம் வைத்து வாங்கும் காசில் தான் அவர்கள் குடும்பம் கஞ்சி காய்ச்சி குடிக்குமோ என்னவோ, இந்தியன் என்ற உணர்வு இந்த மானம்கெட்ட காங்கிரஸ்காரனுகளுக்கு இல்லை, அப்படி இருக்கும் என்றால் சோனியா காங்கிரஸின் தலைவராக வந்தே இருக்கமுடியாது



சரி பொருளாதரத்தை சீற்குலைத்ததை பார்த்தோம் ( என்ன செய்வது என்னால் ஒரு உதாரணம் மட்டுமே குடுக்க முடிந்தது, இவர்களுடைய அனைத்து பொருளாதார கொள்ளைகளை மன்னிக்கவும் கொள்கைகளை விமர்சிக்க ஆரம்பித்தால் அதை மட்டுமே நான் பல வருடங்களுக்கு எழுத வேண்டி இருக்கும் ), நாட்டின் பாதுகாப்பு, இதை பற்றி நான் சொல்ல ஒன்னும் இல்லை உங்களுக்கு தெரியாத எதையும் நான் புதிதாய் சொல்ல போவதில்லை, கஷ்மீர், சீனா, பாகிஸ்தான் அடபோங்கப்பா நமக்கு இலங்கை கூட பிரச்னை ( என்ன கொடுமை சார் இது ) குடுகிறது அந்த அளவிற்கு நம் நாடு மானம் கேட்டு போச்சு, இதை பற்றி பேசினால் உடல் முழுவதும் தீ பிடித்து எரிவதுபோல் இருக்கிறது

சரி உள்நாட்டு பாதுகாப்பை பார்ப்போம், என்னவோ ரயில் நிலையத்தில் கம்மர்க்கட்டு விற்பதுபோல் சுட்டுத்தள்ளிவிட்டு ஒன்றும் தெரியாத பாப்பா போல் தீவிரவாதி கசாப் பேசுகிறான், அவனை தண்டிக்க இந்த காங்கிரஸ் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை கேட்டால் நீதி விசாரணை நடைபெறுகிறது என்று மாண்பு மிகு உள்துறை அமைச்சர், முன்னால் நிதி அமைச்சர் சிதம்பரம் கூறுகிறார், கை புண்ணிற்கு விளக்கு வைத்து பார்ப்பது போல், நக்சல்ஸ் ( நக்சல்ஸ் ஒன்றும் வானத்தில் இருந்து குதித்து விடவில்லை அடிமைப்பட்டு கிடந்த ஒரு இனம் தன் அடிமை தனத்தை அறுத்து எறிய புறப்பட்டது அவர்களின் பெயர் தான் நக்சல்ஸ், நாட்டில் தீவிரவாதிகள் எங்கு இருக்கிறார்கள் என்று எளிதில் கண்டுபிடித்து விடலாம் ஆனால் நக்சல்ஸ் எங்கு இருக்கிறர்கள் என்று கண்டு பிடிக்க முடியாது ஏன் என்றால் மக்களுக்காக போராடுபவர்கள் மக்களுடனே இருக்கின்றனர் அவர்களை மக்களிடம் இருந்து பிரித்து பார்க்க முடியாது ) இவர்கள் உருவாக காரணம் முந்தைய இன்றைய காங்கிரஸ் அரசுகளின் தவறான கொள்கைகள் ஆகும், பசுமை வேட்டை ( green hunting ) என்ற பெயரில் மலை வாழ் மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்க பார்த்தது இந்த காங்கிரஸ் அரசு அதிலும் அதிகமாக ஈடுபாடு காட்டியவர் சிதம்பரம் அவர்கள், ( நிதி துறையை கெடுத்துவிட்டு உள்துறையயும் கெடுத்துக்கொண்டு இருக்கிறார் இது எப்படி இருக்கிறது என்றால் தானும் கேட்டு வனத்தையும் கேடுததாம் குரங்கு ) வறுமைக்கு எதிராக எதிர்த்து போராடிய மக்கள் கடைசி கட்டமாக ஆயுதத்தை கையில் எடுத்தார்கள், அவர்கள் தான் நக்சல்ஸ் என்று இந்த அரசு அழைக்கிறது,

ஜார்கண்டில் உள்துறை அமைச்சர் ஒருமுறை வந்து ஒரு பொது மேடையில் பேசிவிட்டு போய்விட்டால் நாங்கள் நிபந்தனைகளற்று சரணடைகிறோம் என்று நக்சல்ஸ் சவால் விட்டார்கள், நம் உள்துறை அமைச்சர் சிதம்பரம் உள்ளே போய் ஒளிந்துகொண்டார், அப்பொழுது சும்மா இல்லாமல் நக்சல்சை அழிக்க நான் விமான படையை பயன்படுத்தபோகிறேன் என்று சொல்லி விமான படை மார்சல்ளிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார் அந்த தமாசை பார்த்து இந்தியாவே சிரித்தது ( தமிழன் தலைகுனிந்தான் அவமானத்தால், ஏன் அந்த நாதாறியும் தமிழன் ஆயிற்றே, கலாம் போன்ற மேதைகள் வந்த இனத்தில் இப்படியும் ஒரு ஈனப்பிறவி ), CRPF இன் தலைவர் சொன்னது அவர்களும் இந்தியர்கள் தான், அவர்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகிறது அதனால் தான் அவர்கள் ஆயுதம் ஏந்தி போராடுகின்றனர் என்று சொல்லி இருந்தார் இதில் கவனிக்க படவேண்டிய செய்தி நக்சல்ஸ் அதிகமாக கொன்றது CRPF படை வீரர்களை தான் ஆனாலும் CRPF படையினர் அவர்கள் தலைவர் சொன்னதை ஆமோதிக்கின்றனர் அவர்கள் சொல்வது எல்லாம் என் சகோதரனுக்கு எதிராக நான் சண்டை போடவேண்டி உள்ளதே என்பது தான், இதற்க்கெல்லாம் என்ன காரணம், ஏன் என்றால் அந்நியன் 400 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டது பத்தாது இன்னும் பல 100 ஆண்டுகள் அவர்கள் ஆளவேண்டும் நாம் அடிமையாக இருக்க வேண்டும் என்ற நினைப்பு காங்கிரஸ் கட்சிக்கு,

காங்கிரஸ் கட்சியினர் வேண்டுமானால் அடிமைத்தனம் என்ற நாய் சங்கிலியில் கட்டப்பட்டு இருப்பதை பெருமையாக கருதலாம் ஆனால் என்ன செய்வது வீர வாஞ்சியும், பாரதியும், தீரன் சின்னமலையும், கப்பல்லோட்டிய தமிழனும் , கட்டபொம்மனும், மருது சகோதர்களும், பசும் பொன் ஐயா அவர்களும் இன்னும் பல வீர தலைவர்கள் பிறந்த மண்ணில் அல்லவா நாம் பிறந்து இருக்கிறோம் அடிமைதனத்தை அறுத்து எறியவே நாம் முனைவோம், அதன் வெளிப்பாடு கடந்தமுறை நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவு காங்கிரஸின் தமிழக பெரும் தலைவர்கள் ஒருவர் கூட வெல்ல முடியவில்லை சிதம்பரம்மும் வென்றதாக அறிவிக்கப்பட்டார் அவ்வளவே, இதன் பிறகும் காங்கிரஸ் தமிழகத்தில் திருந்திய பாட்டை காணவில்லை தவளை போல் கத்திக்கொண்டும் குதித்துக்கொண்டும் இருக்கின்றனர் அதன்பிறகாவது திருந்துவார்கள் என்றால் அதுவும் இல்லை 63 நாயன்மார்களாய் சட்ட மன்ற தேர்தலில் நின்று பஞ்ச பூதங்களாய் வென்றார்கள்

முக்கியமான ஒருவரை பற்றி இப்பொழுது பார்ப்போம் அவர்தான் இந்தியாவின் விடிவெள்ளி, ஏழைகளின் இதய தெய்வம், இளைஞர்களின் கண்கள் திரு. ராகுல் அவர்கள் ( கை தட்டுங்கப்பா ), கிழவியை கட்டிபிடித்து ஏழைகள் வீட்டில் கஞ்சி குடித்துவிடுபவர்கள் எல்லாம் எம்ஜியார் ஆக முடிமா ?, இது எப்படி என்றால் நானும் தமிழில் கவிதை எழுதுகிறேன் என்னையும் திருவள்ளுவர், பாரதி, கண்ணதாசன் வரிசையில் வையுங்கள் என்று தமிழ் தெரியாத ஒரு பிலக்கா பையன் சொல்வது போல் இருக்கிறது, இந்த ஏழைகளின் இதய தெய்வம் ராகுல் தான் இந்தியா முன்னேறுவதற்கு ஏழைகள் தான் காரணம் என்று சொன்னவர் அதுமட்டும் அல்ல, நாட்டில் எதற்கு எடுத்தாலும் பலி போட இந்து சங்கங்கள் தான் ராகுலுக்கு கிடைத்து இருக்கிறது, ராகுலின் பெரிய ஆயுதம் காவி பயங்கரவாதம், அது கிட்ட தட்ட ( பின் வருபவை என் நண்பன் சொன்னது,. நண்பா நன்றி உன்னால் இது அனைவருக்கும் தெரிகிறது ) இப்பொழுது ஒரு ராக்கெட் சரியாக விண்ணில் செலுத்த முடியாமல் தோல்வியடைந்ததற்கு காவி பயங்கரவாதமும் இந்து கடவுளுகளும் தான் காரணம் என்று சொல்லும் அளவிற்கு ராகுலிற்கு ஆகிவிட்டது அந்த அளவிற்கு இந்துகளின் மீது பாசம், இந்த மூதேவி கால் வைத்த இடம் எல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு பலத்த தோல்விதான், மிக சிறந்த உதாரணம் பீகார் [ உலகின் முதல் பல்கலைகழகத்தை நடத்தியவர்களுக்கு தெரியாதா எது உண்மை என்று :) ]

ராகுலின் மீது கற்பழிப்பு குற்றச்சாட்டு ஒன்றும் உள்ளது அதுவும் தனியாக அல்ல தன் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு பொண்ணை கற்பழித்ததாக, உத்தரபிரதேஷ் மாநிலத்தில் அமேதியில் 4 டிசம்பர் 2006 இல் சுகன்யா என்ற பெண்ணை கற்பழித்ததாக, சந்தேகம் உள்ளவர்கள் கூகிள்ளில் போல் gang rape by ragul Gandhi என்று குடுங்கள் உண்மை தெரியும்

இன்னமும் பல செய்திகள் இருக்கின்றன காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்ய ஆனால் அது எல்லாம் பரவலாக எல்லோருக்கும் தெரிந்தது தான், அதை பற்றிய விமர்சனங்களும் வந்துகொண்டுதான் உள்ளது

அதுசரி ஏன் திமுக பற்றி எழுதவில்லை என்று கேட்பது தெரிகிறது, திமுக வை பற்றி ஒரே வார்த்தை என்னவென்றால் திமுக என்பது திராவிட முன்னேற்ற கழகம் கிடையாது அது திருடர்கள் முன்னேற்ற கழகம் இதற்க்கு மேல் சொல்ல ஒன்றும் இல்லை, எல்லாவற்றையும் செல்வி .ஜெயலலிதா அவர்கள் கோவை, திருச்சி மற்றும் மதுரை மாநாட்டில் சொல்லிவிட்டார், அதை பார்க்காதவர்கள் you tube இல் போய் பார்த்துக்கொள்ளவும்

காங்கிரஸ் கட்சியை பார்க்கும் பொழுது என் பாரதியின் பாடல் தான் நினைவிற்கு வருகிறது

நெஞ்சு பொறுக்கவில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை பார்க்கையிலே


விமர்சனங்கள் வரவேற்க்கப்படுகின்றன

அடுத்த தகவல் சற்றே அதிர்ச்சிக்குள்ளாக்கும் செய்தியாக இருக்கலாம், செய்திகளை தொகுக்கும் முயற்சில் இறங்கியுள்ளேன், பார்ப்போம் எனக்கு கிடைக்கும் தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

காங்கிரசும் அதன் கயமைத்தனமும்

விலைவாசி உயர்வு, லோக்பால் சட்டவரைவு, மும்பை குண்டு வெடிப்பு, தீவிரவாதிகளுடன் மிதவாத போக்கு என்று காங்கிரஸ் அரசின் கையாலாகாத போக்கை கண்டு மனம் கொதித்தது, அப்பொழுதான் யோசித்தேன் காங்கிரஸ் கட்சி எப்படி நம்மை சுகந்திரத்திற்கு முன்பு இருந்து ஏமாற்றி வந்தது, அதன் தலைவர்கள் என்ன செய்தார்கள் என்று யோசனை செய்து பார்த்தேன் அனைத்தும் மிக மோசமான ஒன்றாக தான் இருந்து இருக்கிறது , நடந்தவைகள், நடந்துகொண்டு இருப்பவைகள் அனைத்தும் காங்கிரஸ் அரசின் கையாலாகாத போக்கைத்தான் காட்டுகிறது

காங்கிரஸ் 1885 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது அதன் முதல் தலைவர் உமேஷ் சந்திர பானர்ஜி அவர்கள், 1900 களில் சுகந்திரம் எனது பிறப்புரிமை, அதை என்ன விலை குடுத்தேனும் பெறுவோம் என்று பால கங்காதர திலகர் எனும் சிங்கம் கர்ஜித்த குரல் நாடு முழுவதும் எதிரொலித்தது, உண்மையை சொல்ல வேண்டும் என்றால் காங்கிரஸின் கோஷ்டி பிரிவு என்பது 100 ஆண்டுகால பாரம்பரியத்தை கொண்டது, எப்படி என்றால் காங்கிரஸில் மிதவாதிகள் மட்டுமே இருந்துவந்த நிலையில் தீவிரவாதிகள் அல்லது தீவிர போக்குடையவர்கள் என்ற பிரிவு தோன்றியது 1900 களில் தான், தீவிர போக்குடையவர்களின் தலைவராக பால கங்காதர திலகர் அவர்கள் செயல்பட்டார்கள், எனவே காங்கிரசும் கோஷ்டிகளும் பிரிக்க முடியாத உடன்பிறப்புகள், அவர்களின் கலாசாரம், பண்பாடு, எல்லாம் கோஷ்டி பூசலில் தான் இருக்கிறது அதை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்

1915 இந்த ஆண்டில் தான் காந்தி காங்கிரசை வழிநடத்தவும், இந்திய சுகந்திர போருக்கு தலைமை ஏற்க்கவும் செய்தார், ஒன்று புரிந்துகொள்ளுங்கள் இனி நான் சொல்லவருவது எல்லாம் ஒரு நடுநிலையான விமர்சனமாகும், எதையும் நான் ஆதாரமில்லாமல் எழுதவில்லை, சந்தேகம் இருப்பவர்கள் என்னிடம் கேட்கலாம்

காந்தி உலகம் கொண்டாடும் உத்தமர், மகாத்மா, மனிதரில் புனிதர் .... இன்னும் அவரை பற்றி சொல்லிக்கொண்டு இருப்பவர்கள் இருக்கின்றனர், உண்மையில் காந்தி காங்கிரஸ் கட்சியில் எந்த ஒரு பதவியிலும் இல்லாவிட்டாலும் கட்சியின் போக்கையும், அதன் தலைவர்களின் போக்கையும் கட்டுப்படுத்தியவர் ஒரு சர்வாதிகாரி ,தன் மக்களை ஆட்டுவிப்பது போல் கட்சியின் தலைவர்களை ஆட்டுவித்தார் என்றால் அது மிகையாகாது, உதாரணம் காந்திக்கு தீவிர போக்குடைய தலைவர்களை கண்டால் சுத்தமாக பிடிக்காது,

1928 டிசம்பரில் கல்கத்தாவில் நடத்த மாநாட்டில் முழு சுகந்திரம் மட்டுமே வேறு எதுவும் வேண்டாம் என்று நேதாஜி அவர்கள் கொண்டுவந்த தீர்மானத்தை காந்தி தோற்கடித்தார் அது மட்டும் அல்ல 1938 மற்றும் 1939 இரண்டுமுறை காங்கிரஸ் தலைவராக நேதாஜி அவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டார், அப்பொழுதெல்லாம் தொண்டர்களின் பெரும்பான்மையை பெற்றவர் தான் தலைவராக வர முடியும், இரண்டாம் முறை நேதாஜியை எதிர்த்து பட்டாபி சீதாராமையாவை நிறுத்தியவர் காந்தி அதையும் தாண்டி நேதாஜி அவர்கள் வெற்றிபெற்றார், அப்பொழுது பட்டாபியின் தோல்வி என் தோல்வி என்று காந்தி சொன்னார், அதுமட்டும் அல்ல அதே ஆண்டு கல்கத்தாவில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது நேதாஜியின் தலைமையில், காந்தி அந்த மாநாட்டை புறக்கணித்தார், அதைகண்டு மற்ற தலைவர்களும் நேரு போன்றவர்களும் புறக்கணித்தனர், தலைவர்களின் புறக்கணிப்பையும் தாண்டி அந்த மாநாடு மாபெரும் வெற்றி அடைந்தது அதற்க்கு காரணம் அங்கு கூடிய மக்கள் வெள்ளம், அதை கண்டு காந்தியே அதிர்ச்சி அடைந்தார், மக்களின் தலைவர் எப்பொழுதும் நேதாஜி தான், தான் அல்ல, தான் ஒரு ஒரு தலைவர்களின் தலைவர் என்று காந்தி உணர்ந்த தருணம் அது, கல்கத்தா மாநாட்டிற்கு பிறகு நேதாஜி அவர்கள் காங்கிரசை விட்டு வெளியேறி பார்வர்ட் ப்ளாக் கட்சியை ஆரம்பித்தார்

நல்லது சொல்பவர்கள் எல்லாம் நாட்டிற்கு விரோதிகள் என்று காந்தியாலும் அவரின் அடிபோடிகலாலும் பரப்பப்பட்டது, அதையும் தாண்டி நேதாஜி, திலகர், பகத்சிங், வாஞ்சிநாதன் மேலும் பலரின் புகழ் இன்றும் நம் இதயங்களில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது, இதில் கொடுமை என்ன வென்றால் வாஞ்சிநாதன் அவர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட ஆஸ் துரையின் கல்லறை இன்றும் பாதுகாப்பாக திருநெல்வேலியில் இருக்கிறது, அவரின் சந்ததிகள் அதை பாதுகாக்க இன்றும் பணம் அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள், ஆனால் நம் வாஞ்சிநாதனின் கல்லறை யிருந்த இடம் தெரியாமல் இருக்கிறது இதற்கு காரணம் இந்த காங்கிரஸ் அரசு தான்,


விட்டால் நீ ஊருக்குள் நாய் ஓடினால் கூட அது காங்கிரஸ் அரசின் குற்றம் என்று சொல்வாய் போல் இருக்கிறது என்று நீங்க சொல்லலாம், , நம் நாட்டின் சுகந்திர வேள்வியில் தன் இன்னுயிரை ஈர்ந்த கோடிக்கணக்கான வீரர்களின் நினைவாக என்ன இந்த அரசாங்கம் செய்து இருக்கிறது, அதிலும் போராட்ட வீரர்களை ஒன்று திரட்டி தலைமை பொறுப்பேற்று பல இன்னல்களை சந்தித்த தலைவர்களை இவர்கள் கண்டுகொள்ளவில்லை, காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை நேருவும் , காந்தியும் மட்டும் தான் இந்தியாவிற்கு சுகந்திரம் வாங்கித்தந்தார்கள் அவ்வளவு தான், மற்றவர்கள் எல்லாம் சும்மா வந்து நின்றுவிட்டு போய்விட்டார்கள் என்ற எண்ணம்,

உங்களில் எத்தனை பேருக்கு சந்திப் உத்தம் சிங் இந்த பெயரை தெரியும் ?, ஜெனரல் டயர் இந்த பெயர் இந்திய உள்ளங்களை இன்னமும் அரித்துக்கொண்டு இருக்கும் ஒரு பெயர் இந்த பாதகனை அழித்த வீரர் தான் இந்த உத்தம் சிங், இன்னமும் இதுபோன்ற இளம் வீரர்கள் தங்கள் இன்னுயிரை சுகந்திர வேள்வியில் இட்டு வேள்வியை வெற்றி பெற செய்தனர், இவர்களை எல்லாம் நாம் மறந்து விட்டோம் , இல்லை இவர்களை பற்றி நமக்கு யாரேனும் சொல்லி இருந்தால் தானே நாம் தெரிந்துகொண்டு பின்னாளில் மறப்பதற்கு,

இன்னமும் என்னால் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி, மணியாச்சி ரயில்நிலையத்தில் நான் நின்றுகொண்டு இருந்தேன், ரயிலும் வந்தது அப்பொழுது என் கண்முன் வாஞ்சிநாதன் ஆஸ் ஐ சுட்டுவிழ்த்தி தானும் சுட்டுக்கொண்டு இறந்த நிகழ்ச்சி என் கண்முன் விரிந்தது, ஒரு நிமிடம் நான் இருக்கும் நிலையை மறந்தேன், அப்பொழுது நினைத்துக்கொண்டேன் எவ்வளவு தியாக உள்ளங்களால் இந்த சுகந்திரம் நமக்கு கிடைத்தது, அதை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்றும் நினைத்துப்பார்த்தேன் தானாக என் தலை அந்த இடத்தில குனிந்தது, ஆஸ் தான் பகத்சிங்கிற்கு தூக்குதண்டனை குடுத்தவர், அதற்காக தான் வீர வாஞ்சி ஆஸ் ஐ சுட்டுவிழ்த்தினார், பகத்சிங்கிற்க்கும் வாஞ்சிநாதனுக்கும் என்ன சம்பந்தம்?, ஆனாலும் ஒரு தாய் இல்லாவிட்டாலும் தன் சகோதரனை தூக்கில் இட்டதற்காக பழிவாங்கினார் வாஞ்சி, இன்று இந்த எண்ணம் எத்தனை இந்திய சகோதர்களிடம் இருக்கிறது ???

காந்தி எனும் தனிமனிதர் தான் நினைப்பது மட்டும் தான் மக்கள் கேட்க வேண்டும் என்று நினைத்தார், அதன்படி ஆட்டுமந்தைகளாக நேருவும் மற்ற காங்கிரஸ் தலைவர்களும் தலையாட்டினார்கள், அதன் உச்சகட்ட கொடுமை பாகிஸ்தான் பிரிவின் பொழுது நடந்த கலவரம் அது இன்னமும் பல அழியா சின்னங்களை அதுகொண்டுள்ளது, இன்றைய தலைமுறைக்கு ( நமக்கு ) அதன் பாதிப்பு தெரியாது ஏன் என்றால் அதை இந்த காங்கிரஸ் அரசாங்கம் முடி மறைத்து விட்டது, உயிர் அற்ற உடல்களாய் நம் தாதாக்களும், உயிரும் கற்பும் அற்ற உடல்களாய் நம் பாட்டிமார்களும் இந்தியாவிற்கு அனுப்பிவைத்தது பாகிஸ்தான், இதை பற்றி காந்தி ஒரு வார்த்தை கூட வாயை திறக்கவில்லை, அப்படி பேசி இருந்தால் தன் மீது மத முத்திரை விழுந்து விடும், தான் காப்பாற்றிவரும் தூய வடிவம் களைந்து விடும் என்று வாயை முடிக்கொண்டு இருந்தார், இதன் விளைவாக தான் கோட்சே காந்தியை கொன்றார், இன்னமும் தெரிய வேண்டும் என்றால் காந்தியின் மகன் ராமதாஸ் எழுதிய சுயசரிதயை படித்து பாருங்கள் தெரியும், காந்தியின் மற்றும் ஒரு முகம் எப்படி என்பது தெரியும்.

போகட்டும் எப்படியோ சுகந்திரம் கிடைத்து விட்டது, காந்தி போய் விட்டார், அடுத்தது நேரு அவர்கள், அவரும் சர்வாதிகாரி போல்தான் நடந்து கொண்டார், அதை பார்ப்போம், நேரு அவர்கள் அம்பேத்கரை இந்திய சட்டதிட்டங்களை நீங்கள் தான் உருவாக்கும் பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார், அம்பேத்கரும் மிக மகிழ்ச்சியாக சென்றார் அப்பொழுது நேரு அவர்கள் பிரிட்டிஷ் சட்டதிட்டங்களை அண்ணலின் கரங்களில் குடுத்து இதை இந்திய மொழியில் மொழிபெயர்த்து விடுங்கள் அது போதும் என்று சொல்லிவிட்டார், அம்பேத்கரும் என்ன செய்வது என்று தெரியாமல் நேரு சொன்னதை செய்துவிட்டார், அதை தன் சுயசரிதையில் வேதனையுடன் அதை இந்திய சட்டங்களை நான் உருவாக்கவில்லை, எழுதினேன் அவ்வளவே என்று குறிப்பிட்டு இருந்தார்,

காஸ்மீர் பிரச்னை இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களால் எளிதில் தீர்த்து வைத்து இருக்க முடியும், அதை நேரு தான் தடுத்துவிட்டார் ஏன் என்று கேட்டால் இறையாண்மை என்று நேருவிடம் இருந்து பதில் வந்தது, இதை பற்றி இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் சொல்லி இருக்கிறார், இந்த பிரச்னை நாம் இருக்கும் பொழுதே தீர்க்க வேண்டும் இல்லை என்றால் எந்த காலத்திலும் முடியாது என்று தீர்க்க தரிசனமாக சொல்லியதை நேரு அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, அதன் பயன் இந்தியாவின் தலையில் இன்றும் கலவரங்களும், குண்டுவெடிப்புகளும் நடந்துகொண்டு இருக்கிறது

பசுமை புரட்சி என்ற பெயரில் காங்கிரஸ் அரசின் தலைமையில் சுவாமிநாதன் அவர்களால் நடத்தப்பட்டது மாபெரும் கொடுமை, அதுவரை இயற்க்கை உரங்களை பயன்படுத்திய விவசாயின் கைகளில் விஷத்தை ( செயற்கை உரங்களை ) குடுத்து மண்ணை விசப்படுதும் முயற்சியில் இறங்கியது இந்த காங்கிரஸ் அரசு, இப்பொழுது இதே சுவாமிநாதன் அவர்கள் இப்பொழுது இயற்க்கை உரத்தை பயன்படுத்த வேண்டும் என்று கூறிக்கொண்டு இருக்கிறார், கண் கெட்ட பின்பு சூரியநமஸ்காரம் !!!!!!!!!!, நதிகளை இணைக்க எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை குறைந்த பட்சமாக நதிகளை தேசிய நதிகளாக மாற்றி இருந்து இருக்கலாம் அதுவும் செய்யவில்லை

நேருவிற்கு பின் லால் பகதூர் சாஸ்திரிகள் கர்மவீரர் அவர்களால் பிரதம மந்திரி ஆக உருவாக்கப்பட்டார், இவரை போன்று ஒரு தலைவர் காங்கிரஸில் இருந்தவர் யார் என்றால் இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் தான்,பாகிஸ்தான் அணு ஆயுத சோதனை நடத்தினால் அந்த நாட்டின் மீது படையெடுக்கவும் தயங்க மாட்டேன் என்று அமெரிக்க தூதரிடம் கர்ஜித்தவர் நம் சாஸ்திரி அவர்கள் ( இதை சில நாளிதழ் செய்திகளில் நீங்கள் படித்து இருக்கலாம் ), பதவிக்கு வந்த சில காலத்தில் காலன் சாஸ்திரி அவர்களை தன்னிடம் அழைத்துக்கொண்டார்,

காங்கிரஸ் கட்சி மட்டும் அல்ல மொத்த உலக நாடுகளும் காங்கிரஸில் ஒரு உண்மையான தலைவரை சாஸ்திரிக்கு பிறகு பார்த்தது அவர்தான் இந்திரா காந்தி அவர்கள், இவர் காலத்தில் தான் வங்கிகள் தேசியமயம் ஆக்கப்பட்டன, அதுமட்டும் அல்ல விடுதலை புலிகளுக்கு ஆதரவு கரம் நீட்டி அணைத்துக்கொண்ட உண்மையான அன்னை, ஆனாலும் இவர் செய்த இரண்டு பெரிய தவறுகள் கச்ச தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது, இதன் பயனை நம் மீனவ சகோதர்கள் அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள், இரண்டாவது ஆபரேஷன் ப்ளூ ஸ்டார், பொற் கோவிலுக்குள் நம் ராணுவம் சென்றது அதன் பயனை அவரே அனுபவித்தார், அதுதான் அவரின் மரணம்

ராஜீவ் காந்தி இந்த பெயர் தமிழர் மனங்களில் கருப்பு பெயராக நிலைத்து என்றால் மிகையில்லை, அமைதிப்படையை அனுப்பி இலங்கை தமிழர்கள் வாழ்வை சிதைத்த சாத்தான்,போர்பஸ் ஊழல் நாயகன், ஒன்றும் பெரிதாய் இந்த ராஜீவ் நாட்டிற்க்கு செய்யவில்லை, செய்தது எல்லாம் தமிழனின் வாழ்விற்கு பாதகம் விளைவித்தது, இவனை கொன்றதற்கு நம் சகோதர்களை பழிவாங்கும் காங்கிரஸ் அரசு இந்திராவை கொன்ற சீக்கியர்களை என்ன செய்தார்கள் ???, இதே ராஜீவை சிங்கள ராணுவ வீரன் ஒருவன் தாக்கினானே அப்பொழுது இந்த ராஜீவ் மண்டையை போட்டு இருந்தால் எவ்வளவு நல்லதாய் இருந்து இருக்கும் ?????

இந்த காலகட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் அரசின் செயல்பாடுகள் மிகவும் மோசமாய் போய்விட்டது அதை நான் மீண்டும் எழுதுகிறேன், இந்த தகவல்களை பற்றிய உங்கள் விமர்சனங்களை எனக்கு அனுபிவைக்கலாம்

திங்கள், 18 ஜூலை, 2011

தென்றல்

தென்றல் இந்த தலைப்பை கவியரசு அவர்கள் தன் பத்திரிக்கைக்கு பெயராய் வைத்ததற்கு ஒரு சுவையான காரணம் இருக்கிறது, கவியரசு அவர்களுக்கு ஒரு ஆத்ம நண்பர் இருந்தார், ஆனால் அந்த நண்பர் யாருக்கு உண்மையான நண்பராய் இருந்தது இல்லை அதுதான் உண்மை, அதற்க்கு கவியரசு அவர்கள் மட்டும் விதி விலக்கா என்ன ?, அந்த நண்பர் கவியரசு அவர்களை படாத பாடு படுத்தி விட்டார், அந்த சமயம் தான் கவியரசு அவர்கள் ஒரு பத்திரிகை ஆரம்பிக்க முடிவு செய்திருந்தார், என்ன பேர் பத்திரிக்கைக்கு வைக்கலாம் என்று அவர் நினைத்த பொழுது அப்பொழுது அவருடைய ஆத்ம நண்பர் ஒரு திரைப்படத்தில் நான் தென்றலை தீண்டியதில்லை ஆனால் தீயை தாண்டி இருக்கிறேன் என்று எழுதி இருந்தார் இந்த வசனத்தை நினைவில் கொண்டு தென்றல் என்று பெயர் வைத்து அதன் முதல் தலையரங்கில் தென்றலை யாரும் தீண்ட முடியாது, தென்றல் தான் நம்மை தீண்டும் என்று அவர் நண்பருக்கு புரியும் படி இடித்துரைத்தார்